விற்பனைக்காக வைத்திருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது


விற்பனைக்காக வைத்திருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது
x

விற்பனைக்காக வைத்திருந்த 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அணிக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அணிக்குறிச்சி பஸ் நிலையம் அருகே மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு மது விற்ற கொலையனூர் கிராமத்தை சேர்ந்த நாகரத்தினத்தை(வயது 31) பிடித்து, அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாகரத்தினத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story