எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்


எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
x

அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த 11-ந் தேதி அன்று அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி,ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.

இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் சூழ்நிலை ஏற்பட்டதால்,வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க.தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.14 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோதலின் போது பங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வீடியோ ஆதாரம் மூலம் அடையாளம் கண்டனர். அடையாளம் காணப்பட்ட இருதரப்பையும் சேர்ந்த 45 பேருக்கு ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்களில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களை இன்றும் ,எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை நாளையும், ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மனில் தெரிவித்து இருந்தனர்.

ஆஜராகும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்,என்று தகவல் வெளியானது. இதனால் சம்மன் பெற்ற ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று போலீசில் ஆஜராகவில்லை. இன்றும்(புதன்கிழமை) எடப்பாடி பழனி ச்சாமி ஆதரவாளர்கள் போலீசாரின் சம்மன் உத்தரவுப்படி போலீசார் முன்னிலையில் ஆஜராகும் வாய்ப்பு இல்லை,என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பொன்னேரி காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story