சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது


சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2023 7:15 PM GMT (Updated: 22 Jan 2023 7:16 PM GMT)

சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

நாகூர் அருகே மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் கடம்பரவாழ்க்கை மேலத்தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ஹரிஹரன் (வயது20), பெருங்கடம்பனூரை சேர்ந்த செட்ராஜ் மகன் ராகவன் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story