நீலகிரி: மின்மாற்றி மீது அரசு பஸ் மோதி விபத்து - மின்சாரம் பாய்ந்து டிரைவர் உள்பட 2 பேர் பலி


நீலகிரி: மின்மாற்றி மீது அரசு பஸ் மோதி விபத்து - மின்சாரம் பாய்ந்து டிரைவர் உள்பட 2 பேர் பலி
x

கூடலூரில் இருந்து அய்யன்கோள்ளி நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யன்கோள்ளிக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மலைப்பாங்கான சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது மோதியது.

இதனால், பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது. இதில், பஸ் டிரைவர், பயணி என 2 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சில பயணிகள் மின்சாரம் பாய்ந்ததில் மயக்கம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடலையும் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story