விவசாயி மீது தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு


விவசாயி மீது தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு
x

விவசாயி மீது தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை சாலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). விவசாயி. இவருடைய தங்கை மகள் கிருத்திகாவுக்கும், குன்னமலை சிக்கி நாய்க்கன்பாளையத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இ்ல்லை. இதனால் கணவன், மனைவி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனை காரணம் காட்டி சதீஷ்குமார் 2-வது திருமணம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வசந்தபுரத்தில் முத்துசாமி இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் எனது குடும்ப பிரச்சனையை குறித்து நீ பேச நீ யார்? எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த முத்துசாமி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சதீஷ்குமாருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் நல்லூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story