2 மூதாட்டிகள் மர்மசாவு


2 மூதாட்டிகள் மர்மசாவு
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் 2 மூதாட்டிகள் மர்மமான முறையில் இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில்நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் நேற்று 70 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் ரெயில்வே இருப்புபாதை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்?, அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதேபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்த மூதாட்டி யார்? ,உடல் நிலை சரியில்லாமல் அவர் இறந்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story