லாரியில் மண் கடத்திய 2 பேர் கைது


லாரியில் மண் கடத்திய 2 பேர் கைது
x

மத்தூரி அருகே லாரியில் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள குண்டேப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் கோவிந்தராஜ் (வயது 35) மற்றும் மணிகண்டன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story