நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது


நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது
x

துறையூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

துறையூர்,செப்.3-

துறையூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரோந்து பணி

துறையூர் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் சோபனபுரம் பிரிவு வனவர் சியாம் சுந்தர், வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் பச்சைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, காஞ்சேரிமலை அருகே 2 பேர் டார்ச் விளக்குடன் சுற்றித்திரிந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மாயம்பாடி பகுதியைச் சேர்ந்த குமார், பிரபு என தெரியவந்தது.

மேலும் அவர்களை சோதனை நடத்தியதில் நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பால்ரஸ் குண்டுகள் வைத்து இருந்தனர். இருவரும் வன விலங்குளை வேட்டையாட வந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

நாட்டு துப்பாக்கி பறிமுதல்

பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் இருவரும் துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story