பெண் உள்பட 2 பேர் பலி


பெண் உள்பட 2 பேர் பலி
x
திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பெண் பலி

மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி போதும்பொண்ணு (வயது 32). நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மாகாளிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த போதும்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மோதி முதியவர் சாவு

திருச்சி ஜங்ஷன் - பூங்குடி ரெயில்நிலையங்களுக்கிடையே மணப்பாறை செல்லும் ரெயில் பாதையில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் மோதி படுகாயத்துடன் கிடந்தார். அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்சி பிராட்டியூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் திருச்சி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story