மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மஞ்சக்கொம்பையை சேர்ந்த சுரேஷ் என்பதும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்தனர்.

இதேபோல் மசினகுடி பகுதியில் உள்ள வன சோதனைச்சாவடியில் சட்ட விரோதமாக மதுவிற்க முயன்றதாக மசினகுடி மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் கைது செய்தார்.


Next Story