மதுபானம் விற்ற 2 பேர் பிடிபட்டனர்


மதுபானம் விற்ற 2 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:45 PM GMT)

வருசநாடு, போடி பகுதிகளில் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா தலைமையிலான போலீசார் நேற்று சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் மூலவைகை ஆற்று பாலம் அருகே ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் 116 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ராயர்கோட்டை கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 38) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனிசிபல் காலனி பகுதியில் மதுபானம் விற்ற வடிவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story