2 தொழிலாளர்கள் தூக்குப்போட்டு தற்கொலை


2 தொழிலாளர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
x

2 தொழிலாளர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

சமயபுரம்:

கூலி தொழிலாளி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). கூலி தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள், 6 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சில நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்த அவர், நேற்று மாலை திருப்பைஞ்சீலியில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

இதேபோல் சிறுகனூரை சேர்ந்தவர் முருகேசன்(34). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story