சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருநெல்வேலி
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story