தற்போது வெற்றிபெறும் கங்கையால் 100 தாமரைகள் மலரும் தமிழிசை பேட்டி
தற்போது வெற்றிபெறும் கங்கையால் 100 தாமரைகள் மலரும் என பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்து உள்ளார்.
சென்னை,
ஆ.கே.நகர் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். பிரசாரம் மேற்கொள்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது வெற்றிபெறும் கங்கையால் (கங்கை அமரன்) 100 தாமரைகள் மலரும் என குறிப்பிட்டு உள்ளார். மோடியின் தாக்கம், ஆக்கம் தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என்று கூறிய தமிழிசை பாஜக வெற்றிபெற்றால் ஆர்.கே.நகர் தொகுதி பிரதமர் பார்வையில் இயங்கும் என கூறிஉள்ளார்.
Next Story