எங்கள் அணியில் விரிசல் இல்லை நெல்லையில் ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
எங்கள் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நெல்லையில் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தர்மயுத்தத்தின் அடிப்படை நோக்கமே குடும்ப அரசியலில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே. பலமுறை கூறியும் ஆளும் அரசு அதனை சரிசெய்வதாக தெரியவில்லை. இரு அணிகளும் இணையவேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம்.
அதிமுக துவக்க நாளான அக்.17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story