காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, காங். கட்சியின் ஆதரவை பெற்றுத்தர வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, காங். கட்சியின் ஆதரவை பெற்றுத்தர வேண்டும் -அமைச்சர்  ஜெயக்குமார்
x
தினத்தந்தி 24 March 2018 5:34 AM GMT (Updated: 24 March 2018 5:34 AM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, காங். கட்சியின் ஆதரவை பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். #Jayakumar #CauveryManagementBoard

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-  

தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, காங். கட்சியின் ஆதரவை பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், தேவைப்பட்டால் காங். கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அ.தி.மு.க அரசு மத்திய அரசிடம் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளது. தமிழகம் சார்பில் இதுவரையிலும் எந்தக் கட்சிகளும் இவ்வாறான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்ததில்லை. அதனால், காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்.

Next Story