சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.79.83 ஆக விற்பனை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.79.83 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 15 பைசாக்கள் உயர்ந்து ரூ. 79.83க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 13 பைசாக்கள் உயர்ந்து ரூ. 72.16க்கு நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை ரூ.80ஐ நெருங்க கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 22 பைசாக்கள் உயர்ந்து ரூ. 79.68க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 19 பைசாக்கள் உயர்ந்து ரூ. 72.03க்கும் விற்பனை செய்யப்பட்டது.