திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும்: மு.க ஸ்டாலின் வேண்டுகோள்


திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும்: மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Aug 2018 2:23 PM GMT (Updated: 7 Aug 2018 2:23 PM GMT)

திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Karunanidhi #KauveryHospital #DMK #ripkarunanidhi #MKStalin

சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,  கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானர்.  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை  அளிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

திமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு, திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். இந்த சூழலில், திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,  திமுக தலைவர் கருணாநிதியின் நீங்கா புகழ் என்றென்றும் நிலைத்திருக்க செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story