தொடர் மழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கனமழை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்வதால் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, வி.கே.புதூர், சிவகிரி, ஆலங்குளம், சேரன்மாதேவி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story