பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 6 Sep 2018 10:47 AM GMT (Updated: 6 Sep 2018 11:01 AM GMT)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Perarivalan

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது.  இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. 

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிதிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் நிதி தேவை குறித்து முழுமையாக எடுத்துக்கூறப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story