மேகதாது அணை விவகாரம்: தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது


மேகதாது அணை விவகாரம்: தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது
x
தினத்தந்தி 29 Nov 2018 5:20 AM GMT (Updated: 29 Nov 2018 5:20 AM GMT)

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது.

சென்னை,

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்துள்ளது.

இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது.

இந்த கூட்டத்தில்  ஒன்பது கட்சிகள் பங்கேற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. 

Next Story