சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:46 PM GMT (Updated: 5 Dec 2018 3:46 PM GMT)

சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

சென்னையை பொறுத்தமட்டில் பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி, நுங்கம்பாக்கம், பெரியமேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்தநிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு மழை பெய்தது.  ராயப்பேட்டை, திருவொற்றியூர், பொன்னேரி, ராயபுரம், எண்ணூர், மணலி, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.  எழும்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

தொடர்ந்து, சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்.  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story