பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரி துறையினரின் விசாரணை


பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரி துறையினரின் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2018 6:02 AM GMT (Updated: 13 Dec 2018 6:02 AM GMT)

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரி துறையினரின் விசாரணை தொடங்கியது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.  இவரிடம் வருமான வரி துறையினர் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சோதனை அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இதற்காக ஒரு பெண் உள்பட 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விசாரணை இன்றும் நாளையும் தொடரும் என்று கூறப்படுகிறது.

Next Story