பெய்ட்டி புயல் தீவிரபுயலாக மாறியது - வானிலை மையம்


பெய்ட்டி புயல் தீவிரபுயலாக மாறியது  - வானிலை மையம்
x
தினத்தந்தி 16 Dec 2018 4:26 PM GMT (Updated: 16 Dec 2018 4:26 PM GMT)

பெய்ட்டி புயல் தீவிரபுயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பெய்ட்டி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி தீவிரப் புயலாக மாறியது. 26 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70-90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரா-புதுச்சேரி மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story