7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ்


7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:04 PM GMT (Updated: 29 Dec 2018 4:04 PM GMT)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கேட்டுக்கொண்டார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெரியார் கருத்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. 

அதற்கு பதிலளித்த சத்யராஜ் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  

ஆணவக்கொலையை விட கொடூரமானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை என்றார்.

Next Story