ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை
ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22–ந்தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவ மாணவியரின் கல்வி பாதிப்படைந்து உள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. எனினும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.
அவர்கள் பணிக்கு திரும்பவில்லை எனில் தற்காலிக ஆசிரியர்கள் அந்த இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இன்று மாலை வரை ஆசிரியர்கள் வராவிட்டால் அந்த இடங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். என கூறபட்டது.
இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மாணவர்களின் நலன் கருதி 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர் என கூறினார்.
போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் 97 விழுக்காட்டினர் பணிக்கு திரும்பியதால் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஜாக்டோ ஜியோ நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடரும் நிலையில் மூத்த அமைச்சர்களுடன், முதலமைச்சர் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story