முதல்வர் பழனிசாமி அழைத்து பேசினால் எங்கள் பிரச்சினைகள் தீரும் என நம்புகிறோம். -ஜாக்டோ ஜியோ
முதல்வர் பழனிசாமி அழைத்து பேசினால் எங்கள் பிரச்சினைகள் தீரும் என நம்புகிறோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
சென்னை
போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல்வர் பழனிசாமி அழைத்து பேசினால் எங்கள் பிரச்சினைகள் தீரும் என நம்புகிறோம்.
இன்று மாலை 3 மணிக்கு கூடவுள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story