மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் -மு.க.ஸ்டாலின்


மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Jan 2019 8:13 AM GMT (Updated: 30 Jan 2019 8:13 AM GMT)

மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாணவர்கள், மக்கள் நலன் கருதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும். தி.மு,க ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும். அதிமுக எடுத்த நடவடிக்கை ரத்து செய்யப்படும் என கூறி உள்ளார்.

Next Story