தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14 வரை நடைபெறும் -சபாநாயகர் தனபால் அறிவிப்பு


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14 வரை நடைபெறும் -சபாநாயகர் தனபால் அறிவிப்பு
x

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 11-ம் தேதி முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

சென்னை,

2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த பட்ஜெட்டில் 38 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டசபையில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. 

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தனபால் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. பட்ஜெட் மீதான பொது விவாதம் 3 நாட்கள் நடைபெறும்,  தொடர்ந்து வியாழக்கிழமை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story