விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை: அமமுக தேர்தல் அறிக்கை


விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை: அமமுக தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 22 March 2019 8:05 AM GMT (Updated: 22 March 2019 8:33 AM GMT)

மக்களவை தேர்தலை முன்னிட்டு அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார்.

சென்னை, 

மக்களவை தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில், இடம் பெற்றுள்ள சில அம்சங்கள் வருமாறு:-

* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும். அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும் கவனம் செலுத்துவோம்.

*விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.
 
*தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்.

* மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி, மதுரைக்கு விரிவாக்கம்,  சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை.

* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி

* ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை 

* தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும்.

* 60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

* முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.

* கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் கைவிடப்படும், எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

*மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

*ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்யப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* 7 பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு வலியுறுத்தப்படும்.

* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனிவாரியம் அமைக்கப்படும்.

* கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணிணி (TAB) வழங்கப்படும்.

* பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

*விவசாயம் & சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

*அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.

Next Story