பொள்ளாச்சி பலாத்கார வழக்கு: திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகனுக்கு சம்மன்


பொள்ளாச்சி பலாத்கார வழக்கு: திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகனுக்கு சம்மன்
x
தினத்தந்தி 26 March 2019 12:01 PM GMT (Updated: 26 March 2019 12:01 PM GMT)

பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் விசாரணையை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீஸ், திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகனுக்கு சம்மன் விடுத்துள்ளது.

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்து சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சபரிராஜன் (வயது 25), அவருடைய நண்பர்கள் சதீஷ் (27), வசந்தகுமார் (24) ஆகியோரை கடந்த 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். கைதான 4 பேரும் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து உள்ளது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அப்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொள்கிறது.

இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் விடுத்துள்ளது. 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story