கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சினை இருக்காது - தமிழிசை சவுந்தரராஜன்
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சினை இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கூட்டணி என்பது தேர்தலுக்கானது, தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பேசுவோம். மத்திய அரசு செயல்படுத்தும் எல்லா திட்டங்களையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் முறியடிப்போம்.
தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்க கூடாது, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சினை இருக்காது.
ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை முதலில் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான். வைகோ எந்த திட்டத்தை எதிர்த்தாலும் அது நல்ல திட்டமே.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story