மதுரையில் அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண்; ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு


மதுரையில் அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண்; ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு
x
தினத்தந்தி 24 July 2019 1:49 AM GMT (Updated: 24 July 2019 1:49 AM GMT)

மதுரையில் அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.

மதுரை,

கேரளாவின் கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.  ரெயிலில் பயணம் செய்த பூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் நடந்து சென்று ரெயில் பெட்டியில் இருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார்.

இதில் அவர் தவறி விழுந்து ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார்.  இதுபற்றிய தகவல் அறிந்து ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர்.  தொடர்ந்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.  இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இதன்பின் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அந்த வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.  ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அந்த ரெயில்களில் இருந்த பயணிகளும் தங்களது ஊருக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர்.

Next Story