ராஜீவ்காந்தி கொலை வழக்கு; ஆயுள் கைதி நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டிப்பு


ராஜீவ்காந்தி கொலை வழக்கு; ஆயுள் கைதி நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 7:41 AM GMT (Updated: 22 Aug 2019 7:41 AM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் நளினி மட்டும் ஒரு மாத பரோலில் தற்போது வெளியில் வந்துள்ளார்.

அவர் தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில், நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளது.

Next Story