சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: இஸ்ரோ முன்னாள் இயக்குநர்


சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: இஸ்ரோ முன்னாள் இயக்குநர்
x
தினத்தந்தி 30 Sep 2019 1:28 PM GMT (Updated: 30 Sep 2019 1:28 PM GMT)

சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் தெரிவித்தார்.

சென்னை,

இஸ்ரோவின் முன்னாள்  இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-  “விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது, இனி அதை பயன்படுத்த முடியாது.

சந்திரயான்-2 முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் ஆர்பிட்டர் இயங்கி வருகிறது. இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் அடுத்தக்கட்ட முயற்சியில் இந்தியா வெற்றி பெறும். சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது, உலகமே இந்தியாவை உற்று கவனித்து வருகிறது” என்றார்.

Next Story