என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்


என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:58 AM GMT (Updated: 7 Dec 2019 10:58 AM GMT)

பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.

சென்னை,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  இன்று தமிழகம் திரும்பினார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:- 

"நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள்; என் மன உறுதியை குலைக்க முடியாது.  

இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது. பாஜகவை எதிர்ப்பதில் தென் மாநில மக்கள் விழிப்புடன் இருப்பது போல் நாடு முழுவதும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

Next Story