முதியவர்களுக்கு மிக பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடு


முதியவர்களுக்கு மிக பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடு
x
தினத்தந்தி 10 Jan 2020 10:18 AM GMT (Updated: 10 Jan 2020 10:18 AM GMT)

முதியவர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடு என தேசிய குற்ற பதிவு ஆணைய புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை

நாட்டில் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தேசிய குற்ற பதிவு ஆணையம் புள்ளி விவரங்களின் படி 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 152 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.  இது நாட்டிலே மிக அதிகமானது ஆகும். தமிழகத்தை தொடர்ந்து மராட்டியம்  (135), உத்தரபிரதேசம் (127) ஆகியவை உள்ளன.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் மூத்த குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 11.2 சதவீத முதியவர்களுக்கு எதிரான  ஒட்டுமொத்த குற்ற விகிதத்தில், 3,162 வழக்குகளில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதியோர் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மராட்டியத்தில் முதியவர்களுக்கு எதிரான அதிகபட்ச குற்றங்கள் 5,961 ஆகவும், மத்தியப்பிரதேசத்தில் 8 சதவீதத்திற்கும் குறைவான முதியவர்கள். அங்கு 3,967 வழக்குகள் உள்ளன.

முதியவர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான கொலை முயற்சி  வழக்குகளையும் தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. 76 முதியவர்கள் குறிவைக்கப்பட்டு உள்ளனர். முதியவர்களிடம் 182 கொள்ளை வழக்குகள் மற்றும் 16 மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்ளன.

Next Story