மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்


மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 20 Jan 2020 9:36 AM GMT (Updated: 20 Jan 2020 9:36 AM GMT)

மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசைத்திருப்ப எதிர்க்கட்சிகள் முயல்கிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காது என்று கூறினார். 

மேலும், மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது என்று அவர் தெரிவித்தார்.

Next Story