திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்
x
தினத்தந்தி 1 Feb 2020 4:07 AM GMT (Updated: 1 Feb 2020 4:07 AM GMT)

ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சூரிய பிரபை சேவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

திருப்பதி,

ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சூரிய பிரபை சேவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அவருக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகனமான ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஏழுமலையானை வழிபட்டனர்.

Next Story