திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்


திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
x
தினத்தந்தி 7 March 2020 5:46 AM GMT (Updated: 7 March 2020 5:46 AM GMT)

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு.  க.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

க.அன்பழகன் அரசியல்வாதி, ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, என பன்முகத்தன்மை கொண்டவர்.  கருணாநிதி அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் அன்பழகன்.   திராவிட இயக்க கொள்கைகளில் இருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாக அன்பழகன் இருந்தார்.   50 ஆண்டு காலத்திற்கு மேல் தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்த அன்பழகன் 9 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story