ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,145 ஆக உயர்வு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு


ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,145 ஆக உயர்வு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 May 2020 4:59 AM GMT (Updated: 27 May 2020 4:59 AM GMT)

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,145 ஆக உயர்வடைந்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு, ஆயிரம் எண்ணிக்கையை கடந்துள்ளது.

இந்நிலையில், சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,525, திரு.வி.க.நகர் 1,285, தேனாம்பேட்டை 1,262 மற்றும் தண்டையார்பேட்டை 1,160 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Next Story