புதுச்சேரியில் புதிதாக 16 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை அமைச்சர்


புதுச்சேரியில் புதிதாக 16 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை அமைச்சர்
x
தினத்தந்தி 19 Jun 2020 4:49 PM GMT (Updated: 19 Jun 2020 4:49 PM GMT)

புதுச்சேரியில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் இந்த நிலைமை மாறி கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று வரை கொரோனாவுக்கு மொத்தம் 271 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காரைக்காலை சேர்ந்த கர்ப்பிணி பெண் உட்பட  16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மருத்துவமனையில் 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். 

Next Story