ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 7 பேர் - சுங்கச் சாவடியில் மடக்கிப் பிடித்த போலீஸ்


ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 7 பேர் - சுங்கச் சாவடியில் மடக்கிப் பிடித்த போலீஸ்
x
தினத்தந்தி 23 Jun 2020 6:00 PM GMT (Updated: 23 Jun 2020 5:37 PM GMT)

ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் பிடிபட்டனர்.

விழுப்புரம் 

ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் பிடிபட்டனர். கொரோனா பரவலை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தி தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது, சைரன் ஒலியுடன் வேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போலீசார், அதில், இ-பாஸ் இல்லாமல் தப்பிச் செல்ல முயன்ற 7 பேரை பிடித்தனர். அவர்கள் அனைவரும், சென்னை திருவேற்காட்டில் இருந்து சென்றதும், விழுப்புரம் மாவட்டம் கொரட்டூர் கிராமத்துக்கு செல்லவிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுனரை கைது செய்த போலீசார், ஆம்புலன்ஸை பறிமுதல் செய்தனர். 

Next Story