மதுரையில் இன்று ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மதுரையில் இன்று ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 July 2020 6:02 AM GMT (Updated: 23 July 2020 6:02 AM GMT)

மதுரையில் இன்று ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. 

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது. அதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மாவட்டத்தில் 5,515 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,016 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றால் 174 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story