அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி
x

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாகை செல்வராசு எம்.பி.க்கு (இந்திய கம்யூனிஸ்டு) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  பின்னர், சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் லேசான பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதேபோல் மயிலாடுதுறை தொகுதி தி.மு.க. எம்.பி. செ.ராமலிங்கத்திற்கு (வயது 75) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ராமச்சந்திரனுக்கும் (வயது 74) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story