தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது: சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு அறிவிப்பு


தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது: சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 10:30 PM GMT (Updated: 14 Aug 2020 9:13 PM GMT)

தமிழக காவல்துறையில் சிறந்த சேவை, புலனாய்வு பணிக்காக 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, 

தமிழக காவல்துறையில் சிறந்த சேவை, புலனாய்வு பணிக்காக 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த பதக்கம் பெறுவோர்கள் பெயர், பதவி விவரம் வருமாறு:-

* டேவிட்சன் தேவாசீர்வாதம்- கூடுதல் டி.ஜி.பி., தொழில் நுட்பப் பணிகள், சென்னை.

* கி.சங்கர்- ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை.

* ச.சரவணன்- துணை போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்.

* டாக்டர் ச.தீபா கணிகர்- போலீஸ் சூப்பிரண்டு, சேலம் மாவட்டம்.

* பி.ஜெகன்நாத்- தலைமை காவலர், வேலைவாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.

இதே போன்று புலன் விசாரணை பணியில் மிகச்சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்களை வழங்கிட, முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார்.

இந்த பதக்கம் பெறுவோர்கள் விவரம் வருமாறு:-

* ஜி.நாகஜோதி- துணை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை.

* இரா.குமரேசன்- துணை போலீஸ் சூப்பிரண்டு, ‘கியூ’ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

* தி.சரவணன்- உதவி போலீஸ் கமிஷனர், வடக்கு சரகம்(குற்றம்), சேலம் மாநகரம்.

* எஸ்.கே.துரை பாண்டியன்- துணை போலீஸ் சூப்பிரண்டு, காட்பாடி உட்கோட்டம், வேலூர் மாவட்டம்.

* ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ்- போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம்.

8 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம் பணம்

* பி.எஸ்.சித்ரா- போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம், திருச்சி மாநகரம்.

* கா.நீலாதேவி- போலீஸ் இன்ஸ்பெக்டர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், சிவகங்கை மாவட்டம்.

* ச.பச்சையம்மாள்- போலீஸ் இன்ஸ்பெக்டர், அரக்கோணம் ரெயில்வே காவல் நிலையம்.

* ப.உலகராணி- போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, திருநெல்வேலி.

* பி.விஜயலட்சுமி- போலீஸ் இன்ஸ்பெக்டர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு, திருநெல்வேலி.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், முதல்- அமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story