முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு


முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு
x
தினத்தந்தி 15 Aug 2020 10:09 AM GMT (Updated: 15 Aug 2020 10:09 AM GMT)

முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

சென்னை

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன், சிவி சண்முகம், உள்ளிட்ட 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.  ஆலோசனைக்கு பிறகு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியை சந்தித்த  மூத்த அமைச்சர்கள், அவருடன் ஆலோசனையில்  ஈடுபட்டனர். முதல் அமைச்சர் பழனிசாமியுடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் சிலர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.  அமைச்சர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.

முதல்வருடன் ஆலோசனை நடத்திய நிலையில், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீண்டும் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து 2வது முறையாக முதல் அமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, காமராஜ் உள்ளிட்டோர் முதல் அமைச்சர் பழனிசாமியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் 2 முறை துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடனும், 2 முறை முதலமைச்சருடனும் அமைச்சர்கள் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்  குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்குமா ?,என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story