முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்துப்பேசினார்.
சென்னை,
சென்னையில் நேற்று நடந்த, அ.தி.மு.க., செயற்குழுவில், முதல்வர் பழனிச்சாமி, - ஓ.பன்னீர்செல்வம் இடையே பகிரங்க மோதல் வெடித்தது.அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எழுந்த போட்டி காரணமாக, கட்சியினர் முன்னிலையில், இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, அக். 7ம் தேதி அறிவிப்பதாக அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டில் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக முதல்வர் கூட்டங்களில் பங்கேற்கும், பன்னீர்செல்வம், இன்று நடக்கும் மாவட்ட கலெக்டர்களுடன் பழனிச்சாமி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், முதல்வர் பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திடீரென சந்தித்துப்பேசினார். அதிமுக முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Related Tags :
Next Story