தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம்: மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம் தொடர்பான மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம் தொடர்பான மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க 9 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் விவரம் வருமாறு:-
* சென்னை-ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.
* காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு-டி.எஸ்.அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.
* திருவள்ளூர்-ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா.
* விழுப்புரம்-பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. எம்.சத்திய பிரியா.
* கடலூர்-வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்.
* திருச்சி, அரியலூர், பெரம்பலூர்- பயிற்சி பிரிவு ஐ.ஜி. எம்.சி.சாரங்கன்.
*புதுக்கோட்டை-சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.ஐ.ஜி. ஆர்.லலிதா லட்சுமி.
*தஞ்சை-தலைமையக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி.
* திருவாரூர்-ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. தமிழ்சந்திரன்.
* நாகப்பட்டினம்-மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன்.
Related Tags :
Next Story