தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம்: மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்


தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம்: மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 24 Nov 2020 8:21 PM GMT (Updated: 24 Nov 2020 8:21 PM GMT)

தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம் தொடர்பான மீட்பு பணிகளை கண்காணிக்க 9 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் புயல்-மழை வெள்ளம் தொடர்பான மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க 9 ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் விவரம் வருமாறு:-

* சென்னை-ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.

* காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு-டி.எஸ்.அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.

* திருவள்ளூர்-ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா.

* விழுப்புரம்-பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. எம்.சத்திய பிரியா.

* கடலூர்-வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்.

* திருச்சி, அரியலூர், பெரம்பலூர்- பயிற்சி பிரிவு ஐ.ஜி. எம்.சி.சாரங்கன்.

*புதுக்கோட்டை-சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.ஐ.ஜி. ஆர்.லலிதா லட்சுமி.

*தஞ்சை-தலைமையக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி.

* திருவாரூர்-ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. தமிழ்சந்திரன்.

* நாகப்பட்டினம்-மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன்.

Next Story