மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று


மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 Dec 2020 2:14 AM GMT (Updated: 25 Dec 2020 2:18 AM GMT)

மதுரையில் மாணவர்களை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவால் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 223 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மதுரையில் நேற்று உயிரிழப்பு இல்லை.

இதுவரை மதுரை அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுடன் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, பாராமெடிக்கல் படிப்பு மாணவிகள் 2 பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story